கரூர்
நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு
கரூர் மாவட்டம், குளித்தலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், குளித்தலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 2 பவுன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
குளித்தலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சம்பூர்ணம்(66). இவர் ஞாயிற்றுக்கிழமை குளித்தலை பேருந்துநிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு நடந்து சென்றார். அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், திடீரென சம்பூர்ணம் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.