கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான வில்வித்தை போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
கரூர் திருமாநிலையூரில் பீல்டு ஆர்ச்சரி அசோசியேசன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியை கே.கே.கணேசன் தொடங்கி வைத்தார். இதில், 10,12,14,17 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் 170 பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கு 10 மீ., 20.மீ., 30 மீ., தொலைவுகளில் சிங்கிள் ஸ்பாட், 5 ஸ்பாட், அணிமல் சூட்டிங் என மூன்று பிரிவுகளில் அம்பு எய்தல் போட்டிகள் நடைபெற்றது.
போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் எம்.ரவிசங்கர் செய்திருந்தார்.