கரூரில் இலங்கை அகதியை கத்தியால் குத்திய அதே முகாமைச் சேர்ந்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் ராயனூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் (41). இவர் புதன்கிழமை இரவு முகாம் முன் நின்று கொண்டு தகாத வார்த்தையால் பேசினாராம். இதை அதே முகாமைச் சேர்ந்த குணா (24) மற்றும் வசந்த்(31) ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஏற்பட்ட தகராறில் குணாவும், வசந்தும் சேர்ந்து கத்தியால் யோகேஸ்வரனை குத்தினர். இதில் படுகாயமடைந்த யோகேஸ்வரன் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில் பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து குணா, வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.