பசுபதீஸ்வரர் கோயிலில் வயலின், இன்னிசை கச்சேரி

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வயலின், இன்னிசை கச்சேரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் வயலின், இன்னிசை கச்சேரி வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
சரஸ்வதி பூஜையை முன்னிட்டு இக்கோயில் நால்வர் அரங்கில் வியாழக்கிழமை இரவு வயலின் மிருதங்கம் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.  திருச்சி ஸ்ரீரங்கம் ஆர். ராம்ஜி வயலின் இசைக்க, மிருதங்கத்தை திருச்சி பி. சுவாமிநாதன் வாசித்தார். 
திருக்குறள் பேரவைச் செயலர் மேலை. பழநியப்பன், நாரதகான சபாவின் இணைச் செயலர் மகேஷ், கமிட்டி உறுப்பினர் வீரமணி உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முன்னதாக சிவாச்சாரியார் ரவி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com