வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா என வாங்கல் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வாங்கலை அடுத்த பாப்புலர் முதலியார் வாய்க்காலில் வியாழக்கிழமை இளம்பெண் சடலமாக கிடப்பதாக குப்புச்சிபாளையம் விஏஓ மலையப்பசாமி வாங்கல் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் சடலத்தை கைப்பற்றி கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இறந்த பெண் யார் என விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அப்பெண் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த பரமானந்தம் மகள் பேபி (21) என்பதும், நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள ஒரு தனியார் பேக்கரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.