அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பால்காரர் இறந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வெரிச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (60), பால் வியாபாரி. இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளபட்டிக்கு சைக்கிளில் சென்று பால் ஊற்றி விட்டு பின்னர் அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் ரெங்கராஜ் நகர் பேருந்துநிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.