சாலை விபத்து: பால்காரர் சாவு

அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பால்காரர் இறந்தார்.

அரவக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பால்காரர் இறந்தார்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த வெரிச்சாம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (60), பால் வியாபாரி. இவர் வெள்ளிக்கிழமை மாலை பள்ளபட்டிக்கு சைக்கிளில் சென்று பால் ஊற்றி விட்டு பின்னர் அரவக்குறிச்சி-பள்ளபட்டி சாலையில் ரெங்கராஜ் நகர்  பேருந்துநிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அரவக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com