ஸ்ரீஅன்னை வித்யாலயா பள்ளியில் வர்ணங்கள் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வர்ணங்கள் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கரூர் வெங்கமேடு ஸ்ரீஅன்னை வித்யாலயா பள்ளியில் வர்ணங்கள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளிக்குழந்தைகள், சிகப்பு, மஞ்சள், பச்சை வர்ணங்களில் ஆடைகளை அணிந்து வந்தனர். அவர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஆர்.மணிவண்ணன் பொம்மைகளைப் பரிசாக வழங்கினார். விழாவில் பள்ளி ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் திரளாகப் பங்கேற்றனர்.