அதிகாரியை தாக்கி செயின் பறிப்பு

கரூரில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அதிகாரியை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் செயின், மடிக்கணினி பறிக்கப்பட்டது. 

கரூரில் பெட்ரோல் சேமிப்பு கிடங்கு அதிகாரியை தாக்கி இரண்டரை பவுன் தங்கச் செயின், மடிக்கணினி பறிக்கப்பட்டது. 
வெண்ணைமலையைச் சேர்ந்தவர் மனோகரன்)51), கரூர் ஆத்தூரில் உள்ள பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் முதன்மை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை இரவு பணி முடிந்து காரில் பெரிச்சிபாளையம் பகுதியில் சென்றார். இவரது காரை நிறுத்திய மர்ம நபர்கள் இருவர் கார் கண்ணாடியை உடைத்தனர். பின்னர் மனோகரன் கழுத்தில் கிடந்த இரண்டரை பவுன் செயின், மடிக்கணினி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர்.  இதுகுறித்த புகாரின்பேரில் வெங்கேமேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com