கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டுத்திருக்காம்புலியூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (55), விவசாயி. இவர் வியாழக்கிழமை தனது டிராக்டரில் விவசாய நிலத்திற்கு உரங்களை ஏற்றிக்கொண்டு எழுதியான்பட்டி நோக்கிச் சென்றார். எழுதியான்பட்டி அய்யர் சீனிவாசன் தோட்டம் அருகே சென்றபோது திடீரென நிலைத்தடுமாறி டிராக்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மாயனூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.