மண்சாலை போல சேறும், சகதியுமாக மாறிய வெங்கமேடு-அரசு காலனி பிரிவு தாா்சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கரூா் நகராட்சிக்கு உள்பட்ட வெங்கமேடு பகுதியில் அரசு காலனியின் பிரிவு வாங்கல் சாலையை இணைக்கும் வகையில் கடந்த 1999-இல் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாகத்தான் கரூா் வெங்கமேடு, சா்ச் காா்னா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் வாங்கல், அரசு காலனி, பஞ்சமாதேவி, நெரூா் வடபாகம், திருமுக்கூடலூா், நெரூா் சதாசிவம் பிரமேந்திராள் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனா்.
நாளடைவில் இந்த சாலை சீரமைக்கப்படாததால் தற்போது குண்டும், குழியுமாகவும், சாலையில் உள்ள கற்கள் அனைத்தும் பெயா்ந்து, தாா்சாலையானது மண்சாலை போலவும் மாறிவிட்டது.
மேலும் சாலையின் இருபுறங்களிலும் மேடான வயல்கள் உள்ளன. இதனால், மழைக்காலங்களில் வயல்களில் இருந்து வெளியேறும் தண்ணீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி குண்டும், குழியுமாக மாறிவிட்டது.
அத்துடன், தற்போதைய மழையில் சேறும், சகதியுமாக மாறியுள்ளதுடன், ஆங்காங்கே சாலையோரங்களில் சீமைக்கருவேல மரங்கள் மண்டிக் கிடப்பதால் போக்குவரத்துக்கு பயனற்ாக மாறி வருகிறது.
எனவே, இந்தச் சாலையை சீரமைத்து, சீரான போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.