காரில் ஆடுகளை கடத்த முயன்ற இருவர் கைது

காரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.

காரில் ஆடுகளைக் கடத்த முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் கடவூர் அடுத்த அத்திக்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் சின்னான்(60). இவர் வியாழக்கிழமை இரவு வீட்டின் முன் கட்டிவைத்திருந்த ஆடுகளை காரில் வந்த மர்ம கும்பல் கடத்த முயன்றது. சின்னான் சத்தம் போட்டதால் கிராமமக்கள் காரை மடக்கி இருவரை பிடித்து பாலவிடுதி போலீஸில் ஒப்படைத்தனர். 
விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம்பட்டியைச் சேர்ந்த சண்முகம் மகன் மணிகண்டன் (25), கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த ஓந்தாகவுண்டனூரைச் சேர்ந்த பழனிசாமி (35) என தெரியவந்தது. 
இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் மேலும் விசாரிக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com