செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் பிப். 24-ல் ஈகைக் கொண்டாட்டம்

புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் வரும் 24-ஆம் தேதி ஈகைக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

புலியூர் செட்டிநாடு வித்யாமந்திர் பள்ளியில் வரும் 24-ஆம் தேதி ஈகைக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக பள்ளி முதல்வர் எம்.எஸ். வித்யா கூறியது:
எங்களது பள்ளியில் மாணவர்கள், பெற்றோர் கொண்ட குளோபல் சிட்டிசன்சிப் என்ற சமூக அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் மூலம் கலை நிகழ்ச்சி, பாரம்பரிய உணவுக் கண்காட்சியை வரும் 24-ம் தேதி பள்ளியில் ஈகைக் கொண்டாட்டம் நிகழ்ச்சியாக நடத்துகிறோம். இதை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், தனியார் பள்ளி மாணவர்கள், பெற்றோர் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்து, இந்நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லங்களைச் சேர்ந்தவர்களுக்கும், ஏழைகளுக்கும் உதவ உள்ளோம்.  மேலும் 24-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு உபகரணங்கள் அரங்குகள், கண்காட்சி அரங்குகள் அமைக்க உள்ளோம். இதன்மூலம் மாணவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக்கவே இந்த நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com