ரயில்வே பணியிடங்களுக்கு கரூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய ரயில்வேயில் இந்தியளவில் பல்வேறு பணிகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் www.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.