கரூர் காந்தி கிராமத்தில் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் ஞானசபை திறப்பு மற்றும் அன்னதானம் திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு வி. அம்மையப்பன் தலைமை வகித்தார். எஸ். கணேசன் விழாவைத் தொடக்கி வைத்தார். வடலூரான் சன்மார்க்க சமரச அறக்கட்டளையின் ஆர்.பொன்னுசாமி அருள்ஜோதியை ஏற்றி வைத்தார். கரூர் ஷோபிகா இம்பெக்ஸின் எம்.சிவசாமி, கல்பனா ஆகியோர் ஞானசபையைத் திறந்துவைத்தனர். தொழிலதிபர் வி.கே.ஏ.சாமியப்பன் அன்னதானத்தைத் தொடக்கி வைத்தார்.அகவல் தரும் தகவல், திருச்செவிக்கு விண்ணப்பம் ஆகிய தலைப்புகளில் அழகர் ராமானுஜம், வெற்றிவேல் ஆகியோர் பேசினர்.