கூட்டத்தின்போது, திடீரென ஒரு பெண் எழுந்து, தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து தனது உடலில் ஊற்ற முயன்றார். இதையடுத்து, அங்கு காவல் பணியில் இருந்த ஊர்க் காவல் படையினர் அவரை மீட்டனர்.
விசாரணையில், கடவூர் வட்டம் பாலவிடுதி அடுத்த கஸ்தூரி குரும்பப்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணகவுண்டர் மனைவி சந்திரா(50) என்றும், அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் தனது நிலத்தின் 70 சென்ட் நிலத்தை அவரது பெயருக்கு எழுதி வைக்குமாறு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், இதுதொடர்பாக பாலவிடுதி போலீஸில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அப்பெண்ணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர்.