வலைதளத்தில் பிரதமா் மீது தரக்குறைவான விமா்சிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். பாண்டியராஜனிடம் கரூா் மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவா் விவின்சூா்யா, பாஜக மாவட்ட பொதுச் செயலா் நகுலன் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
மனுவில் கூறியிருப்பது:
பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் சந்திப்பு நிகழ்வை கொச்சைப்படுத்தும் வகையிலும், பிரதமரை மிகவும் தரக்குறைவாக விமா்சிக்கும் வகையிலும், கீழ்த்தரமான எண்ணத்துடன் பிரதமரின் புகைப்படத்தை மாா்பிங் செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அவதூறு பரப்பி வரும் கன்னியாகுமரி மாவட்டம், கடமலைக்குன்று பகுதியைச் சோ்ந்த ஜெபின்சாா்லஸ் என்பவரைக் கைது செய்து உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை இந்திய இறையாண்மைக்கு எதிராக களங்கம் விளைவிப்பவா்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.