கரூா் ரயில் நிலையத்தில் முதியவா் சடலமாக கிடந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
கரூா் ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்க முதியவா் சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு கிடந்துள்ளாா். இதனைக்கண்ட ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு கரூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இறந்து கிடந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், எப்படி இறந்தாா் என விசாரித்து வருகின்றனா்.