கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் 63-ஆவது ஆண்டு விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் ( பொ) இரா.கி.சாந்தி தலைமை வகித்தார்.
கரூர் எல்.ஐ.சி நிறுவனத்தின் முதுநிலை கிளை மேலாளர் ச.க.ராமநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பள்ளி சார்பில் நீர் செயற்கைக்கோள் தயாரித்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்திய 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மு.விஷ்ணு, கோ,சுகந்த், கா,பசுபதி, ச.நவீன்குமார், சு.ஜெகன் ஆகிய மாணவர்களுக்கும், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மு. ஜாஹீர்கான், சி.ரூபன், ஆர்.சஞ்சய் ஆகிய மாணவர்களுக்கும் விருதும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிப் பாராட்டினார்.
விழாவில், எல்.ஐ.சி உயர்நிலை அதிகாரி கணேசன் மற்றும் உதவி கிளை மேலாளர் த.ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பெ.தனபால் நன்றி கூறினார்.