கரூரில் நடைபெற்ற மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
மாதந்திர விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாவட்ட விளையாட்டரங்கில் துவங்கியது. இதில் கபடி, கையுந்து பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில் கபடிப் போட்டியில் 96 வீரர்களும், 84 வீராங்கனைகளும், கையுந்துபந்து போட்டியில் 120 வீரர்களும், 48 வீராங்கனைகளுமாக மொத்தம் 348 பேர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சனிக்கிழமை தடகளப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கு 100 மீ, 800 மீ, 5000 மீ ஓட்டப்பந்தயங்களும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றது. பெண்களுக்கு 100 மீ, 400 மீ, 1500 மீ ஓட்டப்பந்தயமும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய போட்டிகளும் நடத்தப்பட்டது. தடகளப் போட்டியில் 145 ஆண்களும், 82 பெண்களும் கலந்து கொண்டனர். தடகளம் மற்றும் குழுப் போட்டியில் மொத்தம் 575 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.