கீ. வீரமணிக்கு எதிராக கோஷம்:  4 பேர் கைது

திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய இந்து முன்னணியினர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

திராவிடர் கழகத் தலைவர் கீ. வீரமணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய இந்து முன்னணியினர் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திக தலைவர் வீரமணி ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளைத்திற்கு வியாழக்கிழமை பிரசாரத்திற்கு சென்றார். 
அவர் செல்லும் வழியில் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா பகுதியில் திகவினர் அவருக்கு வரவேற்பு அளித்தனர். 
அப்போது அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பிய கரூர் மாவட்ட இந்து முன்னணி ஒருங்கிணைப்பாளர் கரூர் ஆண்டாங்கோவில் கோவிந்தம்பாளையத்தைச் 
சேர்ந்த சரவணன் (42) உள்பட 4 இந்து முன்னணி 
நிர்வாகிகளை கரூர் நகர காவல் நிலையத்தினர் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com