குடிப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் சஞ்சய்நகரைச் சேர்ந்தவர் கதிரவன்(47). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக மதுபோதைக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால் வாழ்வில் விரக்தியடைந்த அவர் வீட்டில் சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரூர் நகர காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.