அரசு பேருந்து நடத்துநரை தாக்கியதாக இளைஞர் மீது வழக்கு

மகாதானபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மகாதானபுரத்தில் அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கியதாக இளைஞர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து நடத்துநராக இருப்பவர் ரமேஷ்(38). இவர், சனிக்கிழமை கரூர் - குளித்தலை அரசுப் பேருந்து நடத்துநராகப் பணியாற்றி வந்தார். 
அப்போது குளித்தலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மகாதானபுரம் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து கொண்டிருந்தபோது, கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த குமரேசன்(30) போதையில் பேருந்தை நிறுத்தச் சொல்லுமாறு கூறியுள்ளார். 
அப்போது நடத்துனர் பேருந்துநிறுத்தத்தில் நிறுத்துகிறோம் எனக்கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் குமரேசன், பேருந்து நடத்துநர் ரமேஷை தாக்கியுள்ளார். 
இதுதொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின்பேரில் லாலாப்பேட்டை போலீஸார் குமரேசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com