கரூரில் காமராசர் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி நிதியுதவி வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் ப.சின்னசாமி தலைமை வகித்தார். இதில் பெங்களூர் முன்னாள் காவல் துறை உதவி ஆணையர் கு.அண்ணாமலை, ஆரா ஹோம் பேஷன் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் ஆரா.பழ. ஈசுவரமூர்த்தி, சோஷிபா இம்பெக்ஸின் வா.மாரப்பன் ஆகியோர் பங்கேற்று, ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினர். நிகழ்ச்சியில், அறக்கட்டளை செயலர் கு.குணசேகரன், பொருளாளர் இரா.தனபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.