கரூர் காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (60). இவர் தனது பைக்கை வெள்ளிக்கிழமை இரவு அங்குள்ள தனியார் உணவகம் முன்பு நிறுத்திவிட்டு, சாப்பிடச் சென்றுள்ளார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை மர்ம நபர் திருட முயன்றார். இதையறிந்த ஜெகதீசன் சப்தம் போட்டதால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்த இளைஞரைப் பிடித்து வெங்கமேடு போலீஸில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து அந்த நபரைக் கைது செய்துவிசாரித்தபோது, அவர் குளித்தலை அடுத்த உப்பாச்சிப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெள்ளைச்சாமி(23) எனத் தெரியவந்தது. மேலும் விசாரிக்கிறார்கள்.