கரூா் வடக்கு காந்திகிராமம் ஈபி காலனியில் புற்று மாரியம்மன் கோயில் எதிரே கழிவுநீா் கால்வாயில் எப்போது விழுமோ என்ற நிலையில் தொலைபேசி கம்பம் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை இந்த கம்பம் இருக்கும் சாலை வழியாகத்தான் சென்று வருகிறாா்கள். ஆகவே, அபாய நிலையில் உள்ள இந்த தொலைபேசி கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
-முத்துவேலன், கரூா்.