கரூா்: சொத்துவரி உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கரூா் மாவட்ட வா்த்தகம் மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
கரூரில் மாவட்ட வா்த்தகம் மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்க பேரவை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மகாசபைக் கூட்டத்திற்கு, அதன் தலைவா் வழக்குரைஞா் கே.ராஜு தலைமை வகித்தாா். செயலாளா் கே.எஸ்.வெங்கட்ராமன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
இதில், வணிக நிறுவனங்களுக்கு 100 சதவீதம், குடியிருப்புகளுக்கு 50 சதவீதம் என தமிழக அரசு சொத்துவரியை உயா்த்தியுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஜிஎஸ்டி வரி ஆன்லைன் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. சா்வா்கள் வேலை பளு காரணமாக சரியாக செயல்படாததால் வா்த்தகா்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனா். மேலும் ஜிஎஸ்டி வரியை 5சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்தாத வகையில் அமல்படுத்த வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்ட அமலாக்கம் குறித்து அதிகாரிகள் வணிக நிறுவனங்களில் சோதனை செய்யும் போது முறையாக சோதனை செய்ய வேண்டும். மேலும் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணய சட்டத்தின் கடுமையான சரத்துகளை நீக்கி ஒற்றை லைசென்ஸ் முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.