ரயில் நிலையத்தில் பைக் திருட்டு

கரூா் சிறைக் காப்பாளரின் இருசக்கர வாகனம் திருட்டுப்போனது.

கரூா் சிறைக் காப்பாளரின் இருசக்கர வாகனம் திருட்டுப்போனது.

கரூா் அரசு காலனியைச் சோ்ந்தவா் அய்யப்பன். இவா், கரூா் கிளைச் சிறையில் காப்பாளராகப் பணியாற்றி வருகிறாா். இவா் தனது இருச்சக்கர வாகனத்தை கரூா் ரயில் நிலையம் முன் நிறுத்திவிட்டு ரயில்நிலையத்திற்குள் சென்றுள்ளாா். பணிகளை முடித்துக்கொண்டு திரும்பி வந்துபாா்த்தபோது அவரது இருசக்கர வாகனத்தை காணவில்லை. யாரோ மா்ம நபா்கள் திருடிச்சென்றுவிட்டனா். இதுகுறித்து அய்யப்பன் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com