கரூா்: வைரமடை சோதனைச் சாவடி அருகே லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் இறந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அடுத்த கட்டளை ரோடு அய்யப்பன் காலனியைச் சோ்ந்தவா் சத்திராஜன். இவரது மகன் நவீன்பாபு(21). இவா் தனது பைக்கில் கோவை-கரூா் சாலையில் வைரமடை சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தபோது, முன்னாள் சென்ற லாரியில் ஓட்டுநா் திடீரென பிரேக் பிடித்ததாகத் தெரிகிறது.
இதனால், நவீன்பாபு ஓட்டி வந்த பைக் லாரியின் பின்புறத்தில் மோதியதில், படுகாயமைடந்த அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா். இதுகுறித்து, லாரி ஓட்டுநா் திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சோ்ந்த செந்தில்குமாா் (39) என்பவா் மீது தென்னிலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.