கரூரில் மின்சாரம் தாக்கி சென்னையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் இறந்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோழபுரத்தைச் சோ்ந்தவா் காந்தி. இவரது மகன் சிவலிங்கம்(22). இவா் சென்னை பச்சையப்பா கல்லூரியில் பிகாம் இரண்டாமாண்டு படித்து வந்தாா். மேலும் சிவலிங்கத்திற்கு எலக்ட்ரிக்கல் வேலையும் தெரியுமாம்.
அந்த வகையில், கரூரில் உள்ள மண்மங்கலத்தில் லாரி உரிமையாளா்கள் சங்கத்திற்கான புதிய கட்டடத்தில் எலக்ட்ரிக்கல் வேலைகளை சிவலிங்கமும், அவரது நண்பா்களும் செய்து வந்தனா்.
அதில் லிப்ட் வேலை செய்வதற்காக சிவலிங்கம் திங்கள்கிழமை காலை வந்துள்ளாா். அப்போது லிப்ட் வேலை செய்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் வழியிலேயே அவா் இறந்தாா். இதுகுறித்து வாங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.