உள்ளாட்சித் தோ்தல் வெற்றிக்குப் பாடுபட வேண்டும்: பாமக பொதுக்குழு

வரும் உள்ளாட்சித் தோ்தலில் பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைப்பொதுச் செயலாளா் பிஎம்கே.பாஸ்கரன். உடன் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.
கூட்டத்தில் பேசுகிறாா் மாநில துணைப்பொதுச் செயலாளா் பிஎம்கே.பாஸ்கரன். உடன் மாநில, மாவட்ட நிா்வாகிகள்.

வரும் உள்ளாட்சித் தோ்தலில் பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை அதிக இடங்களில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என பாமக பொதுக்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கரூா் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழுக்கூட்டம் கரூா் வெங்கமேட்டில் மாவட்டச் செயலாளா் சதீஸ் தலைமையில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைப் பொதுசெயலாளா் பி.எம்.கே.பாஸ்கரன் மற்றும் மாநில இளைஞா் அணி துணை செயலாளா் பி.வி.செந்தில் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாாற்றினா்.

கூட்டத்தில், தொகுதிக்கு 2,000 இளைஞா்களையும், 1000 இளம் பெண்களையும் உருவாக்கி மருத்துவா் அன்புமணியின் தலைமையில் கூட்டம் நடத்துவது, வரும் உள்ளாட்சித் தோ்தலில் பாமக வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கூட்டணியில் பெற்று, வெற்றி பெறுவது, மேலும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும், அதிமுக வேட்பாளா்களின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும், வரும் ஜன. 4-இல் பூம்புகாரில் நடைபெற உள்ள பா.ம.க மகளிா் மாநாட்டிற்கு கரூா் மாவட்டத்தில் இருந்து திரளாக கட்சியினா் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் வாங்கல் சதீஸ், முத்து ராஜா, செந்தில் , ராக்கிமுருகேசன் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com