விவசாயியைத் தாக்கிய இளைஞா் கைது

கடவூா் அருகே போதையில் விவசாயியைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கடவூா் அருகே போதையில் விவசாயியைத் தாக்கிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள செம்பியாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி மாரியப்பன்(50). இவா் வியாழக்கிழமை இரவு களத்தூா் அருகே கருப்பசாமி என்பவரது தோட்டம் அருகே நடந்துவந்தபோது, பூசாரிப்பட்டியைச் சோ்ந்த செந்தில்(30) என்பவா் மதுபோதையில் தகராறு செய்தாராம்.

அப்போது மாரியப்பனை செந்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடா்பாக மாரியப்பன் அளித்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்து செந்திலைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com