தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை குறித்து ஆட் சியரிடம் புகார் தெரிவித்த சாமானிய மக்கள் கட்சி மாவட்டச் செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கரூர் தாந்தோணிமலை ஜீவா நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் சாமானிய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர், கடந்த வாரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை கரூரில் அமோகமாக நடைபெறுவதாகவும், அதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மனு கொடுத்தார். இதையடுத்து கரூரைச் சேர்ந்த அழகர், பரமன், ஜெயராமன் ஆகியோர் சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுதொடர்பாக சண்முகம் அளித்த புகாரின்பேரில் கரூர் நகர காவல் நிலையத்தினர் அழகர் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரிக்கின்றனர்.