புலியூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கைப்பிடி அரிசித் திட்டம் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
திட்டத்தை கல்லூரி முதல்வர் அ. புனிதா தலைமை வகித்து தொடக்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோரிடம் பெறப்படும் அரிசி மற்றும் உணவு தானியங்கள் கல்லூரியின் லியோ சங்கம் மூலம் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இத்திட்டம் கல்லூரியில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.