வெள்ளியணை அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த பாகநத்தத்தைச் சேர்ந்தவர் ராஜீவ் (35). இவர் தனது பைக்கில் திங்கள்கிழமை இரவு வெள்ளியணை சாலையில் கருவாட்டியூர் என்ற இடத்தில் சென்றபோது, திடீரென நிலைதடுமாறி விழுந்து இறந்தார். வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.