அரவக்குறிச்சி பகுதிகளில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

கரூர் மாவட்ட்ம, அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட அம்மாப்பட்டி, எருமாப்பட்டி ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கரூர் மாவட்ட்ம, அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட அம்மாப்பட்டி, எருமாப்பட்டி ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரூர் ஒன்றியத்துக்குள்பட்ட செவ்வந்திபாளையத்தில் புதன்கிழமையும், வெஞ்சமாங்கூடலூர் கீழ்பாகம்,மேல்பாகம் ஊராட்சிகளில் வியாழக்கிழமையும் கூட்டம் நடைபெற்ற நிலையில், வெள்ளிக்கிழமை இவ்விரு ஊராட்சிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டது.
கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி ஒன்றியச் செயலர் எம்.எஸ். மணியன் தலைமை வகித்தார்.  கரூர் மாவட்ட திமுக செயலர் நன்னியூர் ராஜேந்திரன்,  முன்னாள் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, ம.சின்னசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். 
இதில் பொதுமக்கள் சார்பில், புதிய சாலை, கால்நடை மருந்தகம், சமுதாயக்கூடம், குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை கேட்டுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலர்,  விரைவில்  தமிழகத்தில் மக்களவை தேர்தலோடு, சட்டசபைத் தேர்தலும் வரும். இரு தேர்தல்களிலும் திமுக வெற்றிபெறும்.
 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன், உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மூலமாக அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றித் தரப்படும் என உறுதியளித்தனர்.  கூட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com