குளித்தலை அருகே அரிவாளைக் காட்டி பெட்டிக்கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
குளித்தலை வட்டம், தாளியாம்பட்டி அய்யனேரியைச் சேர்ந்த ரங்கசாமி மகன் நைனார்மலை (32). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சக்திவேல் (27) பீடி வாங்கிவிட்டு பணம் தராமல் சென்றாராம். நைனார்மலை பீடிக்கு பணம் கேட்டபோது, தரமறுத்து கொலை செய்துவிடுவதாகக் கூறி அரிவாளைக் காட்டி சக்திவேல் மிரட்டினாராம். இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தில் நைனார்மலை புகார் செய்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சக்திவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.