குழந்தை இறந்த துக்கம்: தாய் தற்கொலை

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே குழந்தை இறந்த துக்கத்தில் தாய்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் அருகே குழந்தை இறந்த துக்கத்தில் தாய்  விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
உப்பிடமங்கலம் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி கலைச்செல்வி(37). இவர்களுக்கு திருமணமாக 15 ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த 8  ஆண்டுகளுக்கு முன்பு   குழந்தை பிறந்து பின்னர் இறந்துவிட்டதாம். 
குழந்தை இறந்த துக்கம் தாளாமல் இருந்து வந்த கலைச்செல்வி, கடந்த புதன்கிழமை வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். வெள்ளியணை போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com