பொங்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு

கரூர் தாந்தோணிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூர் தாந்தோணிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொங்கல் விழா போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 கரூர் தாந்தோணிமலை காமராஜ் நகருக்குட்பட்ட விக்னேஸ்வரா நகரில் வீரத்தமிழர் பாய்ஸ் குழுவினர் சார்பில் செவ்வாய்க்கிழமை பொங்கலை முன்னிட்டு அப்பகுதி இளைஞர்கள், இளம்பெண்கள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், பெரியோர்களுக்கு ஓட்டப் பந்தயம், முறுக்குக் கடித்தல், சாக்கு ஓட்டம், தேங்காய் உடைத்தல், எலுமிச்சை பழ விழாதபடி ஓடும்போட்டி, முட்டை உடைத்தல், பானை உடைத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், கயிறு இழுத்தல், கயிறு தாண்டுதல், கபடி, சைக்கிள் மெதுவாகச் செல்லுதல், லக்கி கார்னர், கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு முத்திரைத்தாள் கட்டண வட்டாட்சியர் சக்திவேல் தலைமை வகித்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டாட்சியர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். விழாவில் அப்பகுதி பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். 
இதேபோல புதன்கிழமை கரூர்  22 ஆவது வார்டுக்குட்பட்ட கோபாலபுரத்தில் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது. மாலையில் நடைபெற்றபோட்டிகளை டாஸ்மாக் திருவேங்கடம் தொடக்கி வைத்தார். இதில் வட்டச் செயலர் பி.குமார், செல்வகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கரூர் நகர திமுக செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com