கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட புலியூர் பகுதியில் சனிக்கிழமை(ஜூன் 15) மின்சாரம் நிறுத்தம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட புலியூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (ஜூன் 15) நடைபெற உள்ளது.
இதனால் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி,
பாலராஜபுரம், உப்பிடமங்கலம், ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.