பெண் கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் வெங்கமேடு கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குமார்(35). இவர், ஞாயிற்றுக்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள திருமலைபள்ளி அருகே பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அரசு சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது, இங்கு ஆழ்துளை கிணறு அமைக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தாராம்.
மேலும் இதைத் தட்டிக்கேட்ட அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் செந்தாமரைச்செல்விக்கு கொலை மிரட்டலும் விடுத்தாராம். இதுதொடர்பாக செந்தாமரைச்செல்வி அளித்த புகாரின்பேரில் வெங்கமேடு போலீஸார் வழக்குப்பதிந்து குமாரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.