கரூர்: கரூரில் வரும் ஜூலை 23 ஆம் தேதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூலை 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஓய்வூதிய இயக்குநர் ஆகியோரால் நடத்தப்பட உள்ளது.
எனவே, ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறைகள் தொடர்பான மனுக்களை ( 2 பிரதிகள்) கரூர் மாவட்ட ஆட்சியருக்கு "ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் மனு ' என்று எழுதப்பட்ட உறையில், அஞ்சல் மூலமாகவோ அல்லது கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) நேரிலோ வரும் ஜூலை 19-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் அல்லது ஜூலை 23-ஆம் தேதி நேரடியாகவும் மனு அளிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.