குளித்தலை அருகே  வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

குளித்தலை அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

குளித்தலை அருகே தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய வாகனச் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் ,குளித்தலை  அருகிலுள்ள மயிலாடியில்  தேர்தல் பறக்கும் படை அலுவலர் குமார் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கருப்பண்ணன் மற்றும் காவலர்கள் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை சோதனையிட்ட போது, நாமக்கல்லில் இருந்து காரைக்குடிக்கு முட்டை ஏற்றிச் சென்று அங்கு விற்பனை செய்த பணம் ரூ. 1லட்சம் விற்பனை பிரதிநிதி சக்திவேலிடம் ஆவணம் இன்றி இருப்பது தெரிய வந்தது. 
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும்படை குழுவினர் குளித்தலை கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான லியாகத்திடம் ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com