மது போதைக்கு அடிமையானவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் உதயகுமார்(44). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுபோதைக்கு அடிமையானராம்.
இதனால் மது போதையை மறக்க பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் மறக்க முடியாமல் அவதியுற்ற அவர் வாழ்வில் விரக்தியடைந்து வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.