தண்ணீர் சிக்கன பயன்பாடு: டிஎன்பிஎல் நிறுவனத்திற்கு முன்னோடி விருது

புகழூர் டிஎன்பிஎல் நிறுவனத்திற்கு தண்ணீர் சிக்கன பயன்பாடு முன்னோடி விருது அண்மையில் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

புகழூர் டிஎன்பிஎல் நிறுவனத்திற்கு தண்ணீர் சிக்கன பயன்பாடு முன்னோடி விருது அண்மையில் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
இந்தியன் சாம்பர்ஸ் ஆஃப் காமர்ஸ் மத்திய, மாநில அரசு பெருநிறுவனங்களுக்கு நடத்திய போட்டியில், காகிதக் கூழ், காகிதம் தயாரித்தல், எஃகு, சிமென்ட், வங்கி உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் தண்ணீர் சிக்கன பயன்பாடு முன்னோடி விருதுக்கு டிஎன்பிஎல் ஆலை தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து புது தில்லியில் டிஎன்பிஎல் ஆலைக்கு விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. 
விருதினை மத்திய அரசின் கனரக தொழிற்சாலை செயலாளர் முனைவர் பாஸ்கர் சாட்டர்ஜி வழங்க, காகித ஆலை உயர் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com