புன்னம்சத்திரத்தில் ரூ.3.20 லட்சம் மதிப்புள்ள டிப்பர் லாரியை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சின்னாண்டாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். புன்னம்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி முன் செவ்வாய்க்கிழமை நிறுத்தியிருந்த இவரது லாரியை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சரவணன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.