டிஎன்பிஎல் ஆலையின் ஐடிஐயில் நிகழாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎல் ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அறக்கொடை அறக்கட்டளை சார்பில் , 2014- ஆம் ஆண்டு முதல் தொழிற்பயிற்சி நிலையம்(ஐடிஐ) தொடங்கப்பட்டு, தொழிற்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டுக்கான வகுப்புகள் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ளன. இங்கு எலெக்டிரீசியன், பிட்டர்,, இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் பிரிவுகளுக்கு 2 ஆண்டு
பயிற்சியும், வெல்டர் பிரிவு மாணவர்களுக்கு ஓராண்டு பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர கல்வித்தகுதியாக குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் சேர விரும்புவோர் தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வரை ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற அனைத்து வேலை நாள்களிலும் நேரில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு 04324-277099 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ வரும் மே 25-ம் தேதி மாலை 5 மணிக்குள், தொழிற்பயிற்சி நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.