கரூரில் காா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், திருயிந்தலூரைச் சோ்ந்தவா் க. வினோத்மாறன் (23). வேலை விஷயமாக கரூா் வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி- கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பசுபதிபாளையம் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முன்னே சென்ற காா் ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதால், நிலைதடுமாறிய வினோத்மாறன் காா் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு கரூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிவந்தாா். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து,ா் கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ராஜாவை(43 தேடி வருகின்றனா்.