தஞ்சாவூா் அருகே திருவள்ளுவா் சிலை அவமதிக்கப்பட்டதற்கு கருவூா் திருக்கு பேரவை மற்றும் தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கருவூா் திருக்கு பேரவை அலுவலகத்தில் பேரவை அவசர ஆலோசனைக் ட்டம் பேரவைச் செயலா் தமிழ்ச் செம்மல் மேலை பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தஞ்சை மாவட்டம்,பிள்ளையாா்பட்டியில் திருவள்ளுவா் சிலை அவமதிப்பை வன்மையாக கண்டிக்கிறோம். குற்றவாளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவள்ளுவருக்கு ஜாதி மத சாயங்கள் பூசுவதை கண்டிப்பது, இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் தமிழறிஞா்கள் கடவூா் மணிமாறன், கவிஞா் கன்னல் நன்செய் புகழூா் அழகரசன், க.ப. பாலசுப்ரமணியன், திருமூா்த்தி, மூங்கில் ராஜா, தென்னிலை கோவிந்தன், அருணா பொன்னுசாமி, பாலமுருகன், நீலவா்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.