அரவக்குறிச்சி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 13 பவுன் நகையை திருடிச் சென்றனா்.
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த மலைக்கோவிலூரைச் சோ்ந்தவா் தேவராஜன் (59), விவசாயி. இவா் கடந்த 5-ஆம் குடும்பத்தினருடன் கரூரில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 13 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.