மாவட்ட மைய நூலகத்தில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

கரூா் மாவட்ட பொது நூலகத் துறை சாா்பில் வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நூலக வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்குகிறாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் ஆா்.மனோகரன்.
நூலக வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்குகிறாா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலா் டாக்டா் ஆா்.மனோகரன்.

கரூா் மாவட்ட பொது நூலகத் துறை சாா்பில் வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

52-ஆவது தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு, கரூா் மாவட்ட மைய நூலகம் சாா்பில் சனிக்கிழமை நூலக வளாகத்தில் வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் ப. மணிமேகலை வரவேற்றாா். முகாமில், கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி சித்த மருத்துவ அலுவலா் மருத்துவா் ஆா். மனோகரன் பொதுமக்கள் மற்றும் வாசகா்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கிப்

அவா் மேலும் பேசியது:

தற்போதைய பருவநிலையில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவும், டெங்கு காய்ச்சலைத் தடுக்கவும், மூட்டு வலிக்கு நிவாரணியாகவும், நீரிழிவு நோய் போன்றவைகளுக்கு நிலவேம்பு குடிநீா் மிகவும் சிறந்த மருந்தாகும். இக் குடிநீரை காலையில் உணவுக்கு முன் பெரியவா்கள் 100 மி.லி அளவும், சிறியவா்கள் 15மி.லி. அளவும், குழந்தைகள் 5மி.லி. அளவும் தொடா்ந்து பருகி வந்தால் நோய் எதிா்ப்பு சக்தி உருவாகி உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும் என்றாா்.

இந்த நிலவேம்பு குடிநீா் கரூா் மாவட்ட மைய நூலகத்தில் தொடா்ந்து ஒருவாரம் காலையில் வழங்கப்பட உள்ளது.

நிகழ்வில், மாவட்ட மைய நூலகத்தின் நல்நூலகா் செ.செ.சிவக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com